Sunday, December 2, 2018

நடிகை ஃபிரீடா பின்டோ திருமணம்: காதலரை கரம் பிடிக்கிறார்!


நடிகை ஃபிரீடா பின்டோ தனது காதலரை அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

’ஸ்லம்டாக் மில்லினர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்பையைச் சேர்ந்த ஃபிரீடா பின்டோ. இந்தப் படத்தை அடுத்து ஹாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், இப்போது ’மோக்லி: லெஜண்ட் ஆப் த ஜங்கிள்’, ’நீடில் இன் எ டைம்ஸ்டேக்’ ஆகிய படங்களில் நடித் து வருகிறார். ஆங்கில தொலைக்காட்சித் தொடரிலும் நடிக்கிறார்.

இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் ரோஹன் அன்டோ என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவரை பிரிந்தார் ஃபீரிடா. இதையடுத்து ’ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் நடித்த தேவ் படேலை அவர் காதலித்து வந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இப்போது, அவர் சாகசப் புகைப்படக் கலைஞரான கோரி டிரான் என்பவரை காதலித்து வருகிறார்.

இருவரும் விழாக்களுக்கு ஒன்றாகச் சென்று வருகின்றனர். சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை பார்க்கச் சென்ற இவர்க ள், ஸ்டேடியத்தில் முத்தமிட்டுக் கொண்ட காட்சிகள் பரபரப்பானது.

ஃபிரீடாவுடன் நடித்த ஹாலிவுட் நடிகர் ஆரோன் பாலின் நண்பர்தான், கோரி டிரான். அவர்தான் கோரியை, ஃபிரீடாவுக்கு அறிமுகப் படுத்தியுள் ளார். முதலில் நட்பாக பழகிய இவர்கள், பின்னர் காதலில் விழுந்தனர். இந்நிலையில் 33 வயதான ஃபிரீடாவும் கோரி டிரானும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி ஹாலிவுட் தரப்பில் கூறும்போது, ‘தங்களது காதலை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல இருவரும் முடிவு செய்துள்ளனர். அடுத்த வருடம் இவர்கள் திருமணம் நடக்கும். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்’ என்றனர். இந்த காதல் திருமணம் குறித்து ஃபிரீடா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

Tuesday, October 16, 2018

விழா மேடையில் மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய கபாலி நாயகி ராதிகா அப்தே..! - வைரல் புகைப்படம்


நடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். 

இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த நடிகை நிர்வாணமாக நடித்துள்ளாரா..? என்று விஷயம் தீயாக பரவியது. ஆனால், ராதிகா ஆப்டே சளைத்து கொள்ளாமல் பதிலளித்தார். நான் ஒரு நடிகை. இது என்னுடைய தொழில். அந்த படத்திற்கு நிர்வாணமாக நடிக்க வேண்டியிருந்தது அதனால் நடித்தேன் என்று கூறினார். 

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஆவணப்படத்தில் நடிக்கவுள்ளார் ராதிகா அப்டே. இந்த படத்திலும், நிர்வாணமாக நடிக்கும் காட்சிகள் இருப்பதாக கூருகிறார்கள். ஆனால், இந்த முறை சில கட்டுப்பாடுகளுடன் நிர்வாண காட்சிகளில் நடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த இவர் மிகவும் மோசமானகவர்ச்சி உடை அணிந்து வந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார். 

இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,